எமது பாடசாலைக்கு வரவேற்கின்றோம்!

எமது பாடசாலையானது அனுராதபுர மாவட்டத்தின் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட றத்மலை எனும் அழகிய கிராமத்தில் அழகிய சூழலில் அமைந்துள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. (தரம் 1 தொடக்கம் 9 வரையிலான வகுப்புக்கள் காணப்படுகின்றன.) இப்பாடசாலை ஆரம்பத்தில் றத்மலை கிராம மாணவர்களைக் கொண்டு சிறியதாக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது இப்பாடசாலைக்கு மாணவர்கள் யான்ஓயா, ரொட்டுவாவ போன்ற கிராமங்களில் இருந்தும் கல்வி கற்க வருகின்றார்கள்.







